இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய பா.ஜ.க. கோரிக்கை
மதுரை:
இந்திய மாணவ இஸ்லாமிய இயக்கத்தையும் (எஸ்.ஐ.எம்.ஐ), இஸ்லாமிய மாணவர்அமைப்பையும் (ஐ.எஸ்.ஓ.) தடை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின்தேசிய இளைஞரணி செயலாளர் வி.எஸ்.எஸ். பிரபாகர ராவ் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய மாணவ இஸ்லாமிய இயக்கமும், இஸ்லாமிய மாணவர் அமைப்பும் தென்மாநிலங்களில் வன்முறையை பரப்ப பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐயால்உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
இதனால் இந்த அமைப்புகளைத் தடை செய்ய்ப்பட வேண்டும். இந்த இருஅமைப்புகளின் செயல்பாட்டால் கோயம்புத்தூர், ஆந்திராவின் ராஜமுந்திரி போன்றஅமைதியான மாவட்டங்களில் கூட மதக் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவ இயக்கங்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த தமிழகம் மற்றும்கேரளாவில் உளவுத்துறையினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும்வெளிநாட்டினர் இந்த இந்த அமைப்புகளுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதைஅரசு தடை செய்ய வேண்டும்.
பா.ஜ.கவின் இளைஞர் பிரிவின் வீராட் இளைஞர் சம்மேளன மாநாடு வரும்அக்டோபர் 3ம் தேதி ஆக்ராவில் நடக்கவுள்ளது. இந்த மாநாடு 2 நாட்கள்நடைபெறும்.
இந்த மாநாட்டின் போது எய்ட்ஸ், மக்கள் தொகை கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கேடு,வேலை இல்லா திண்டாட்டம், தீவிரவாதம் ஆகிய 5 முக்கிய பிரச்சனைகள் குறித்துமுக்கியமாக விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரும்பங்கேற்க உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications