ராமதாஸ் அராஜகம்: வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை:
ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோரின் அராஜக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னிய சங்கத் தலைவர் நடராஜன் கூறியுள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு என்னையும் வன்னியர் சங்கநிர்வாகிகளையும் தாக்கியது, உத்திரமேரூர் விஸ்வநாதனின் காரை தீ வைத்து கொளுத்தி சேதம் ஏற்படுத்தியது,ராமதாசின் ஊழல்களை வெளியிடுவதற்காக "டாக்டருக்கு மனம் திறந்த மடல்" என்ற புத்தகத்தை ராயப்பேட்டைஅச்சகத்தில் நுழைந்து கொள்ளையடித்தது, பாண்டிச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகளைசேதப்படுத்தியது மற்றும் மீனவ பெண்ணை சாகடித்தது, தீரனின் கூட்டத்தில் அடியாட்களைவிட்டு ரகளை செய்ததுஉள்ளிட்ட வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.
இந்த செயல்களுக்கு தூண்டுதலாக இருந்த ராமதாசின் மகன் அன்புமணி, ஏ.கே. மூர்த்தி,எம்.பி, காட்டுவெட்டி குரு,கடலூர் வேல் முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் அராஜக செயல்களுக்கு தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ராமசாமி படையாச்சி சிலையை அவர் பிறந்து வாழ்ந்த கடலூர் பகுதியில் நிறுவி அதை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைக்க வேண்டும். சைதாப்பேட்டை சட்டசபை இடைத் தேர்தலில் வன்னியர் சங்கத்தின் வேட்பாளரை இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா அனுமதிக்க வேண்டும்.
ராமதாசின் சுயநல சந்தர்ப்பவாதத்தால் வன்னிய சமுதாய மக்களுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று காட்டுகிறேன் என்று சவால் விட்டு, தனது உண்மை பலத்தைதுகிலிருத்துக் காட்ட அவரே சந்தர்ப்பம் அளித்துள்ளார். அவரது சவாலை அனைத்துக் கட்சிகளும் சமுதாயஅமைப்புகளும் ஏற்று செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் நடராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications