For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் 3 சகோதரிகள் சாவில் திடீர் திருப்பம்

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையைச் சேர்ந்த தவசி முத்துவின் 3 மகள்கள் சாவில் திடீர் திருப்பம்ஏற்பட்டுள்ளது.

அவர்கள் 3 பேரும் தந்தையின் கொடுமை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முதலில் இவர்கள் மூவரும் விஷ சாக்லேட்கலைத் தெரியாமல் தின்றதால்தான் மயங்கி விழுந்து இறந்தனர் என்றுதவசிமுத்து கூறியிருந்தார்.

இது பற்றிய முழு விபரம் வருமாறு,

திங்கள்சந்தையைச் சேர்ந்த தவசிமுத்துவுக்கு 3 மனைவிகள். 3 -வது மனைவி பெயர் சிவகாமி. இவர்களது மூத்தமகள் பார்வதிக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அதற்கு சீர் செய்வதற்காக தவசிமுத்து கடன் வாங்கியதால்,தனது மற்ற 3 மகள்கள் மீதும் எரிச்சல் அடைந்து தினசரி அவர்களை திட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.

இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி, விஜயலெட்சுமி, சாரதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

ஆனால் தனது மகள்கள் சாக்கலேட் தின்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தவசிமுத்து போலீசாரிடம்கூறினார்.

இதுகுறித்து இறந்தவர் சிறுமிகளின் சகோதரன் கூறுகையில், அவர்கள் மூன்று பேரும் விஷம் குடித்ததால் தான்இறந்தனர். சாக்கலேட் தின்றதால் இறந்தனர் என்று என் தந்தை கூறுவது பொய் என்றார்.

மேலும், மருத்துமனையில் அந்த 3 பெண்களின் பிரேதங்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் விஷம்குடித்திருந்தததை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் தவசிமுத்து மற்றும் அவரது மனைவி சிவகாமிஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ககன்தீப் சிங் பேடி மருத்துவமனைக்குச் சென்றுஇறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்த உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X