ஜெ. அப்பீல்: அனைத்து மனுக்களும் ஒன்றாக விசாரணை
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கு மற்றும் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகள் சம்பந்தமாகதாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்பீல் மனுக்களையும் வருகிற 27ம தேதி ஒன்றாக விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து டான்சி வழக்கு மற்றும் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனி நீதிமன்றம் வழங்கியுள்ளதண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியே 2 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தார். இந்தவழக்கில் மொத்தம் 17 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த 17 மனுக்களில் ஜெயயலிதா, சசிகலாவின் மனுக்கள், தண்டனை பெற்ற 10 அதிகாரிகளின், அரசுத் தரப்புமனுக்கள் ஆகியவை அடங்கும்.
ஆனால் 4 மனுக்கள் மீதான விசாரணை வருகிற 27 ம் தேதி நடத்தப்படும் என்று நீதிபதி பாலசுப்பிரமணியம்அறிவித்தார்.
இந்நிலையில் 17 அப்பீல் மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற பதிவாளர்அலுவலகத்தில் அரசு வக்கீல் வெங்கடபதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் ஜெயின் மற்றும் தங்கவேலு ஆகியோர்அடங்கிய "பெஞ்ச்" முன்பு வந்ததது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து அப்பீல் மனுக்களும் வரும் 27ம் தேதி விசாரிக்கப்படும் என்றுதீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பின் மூலம் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவின் மனுக்களுக்குநீதிபதி ஜெயின் அதிக முக்கியத்துவம் கொடுத்து விரைவில் விசாரணையை நடத்துவதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இப்போது நீதிபதி ஜெயினை மத்திய அரசு கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்துள்ளது. இந் நிலையில்ஜெயலலிதாவின் தண்டனை தொடர்பான அனைத்து அப்பீல் மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க ஜெயின்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications