காவிரி நீர் கேட்டு தமிழக குழு பெங்களூர் பயணம்
சென்னை:
பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறுபிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் லேசாக மழைபெய்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இருப்பினும் அணையில் தண்ணீர் இருப்பு, விவசாயிகளின் தேவையைதீர்க்கும் வகையில் இல்லை.
எனவே கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து தமிழகத்திற்கு காவிரி நதியிலிருந்து தண்ணீர்திறந்து விடக் கோரி வற்புறுத்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் தலைமைச்செயலாளர் சங்கர், அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு விரைவில் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரைச்சந்தித்து கோரிக்கை விடுக்கும்.
இதுதொடர்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களது பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
காவிரி நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு ஒரு கடிதமும்எழுதப்பட்டுள்ளது. இதன் நகல் கர்நாடக முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.