For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேனர்: துவக்கி வைத்தார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், ரூ.4.60 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன எம்.ஆர்.ஐ.சி.டி. ஸ்கேன் கருவிகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

நலத்துறை அமைச்சர் செம்மலை நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்அமைக்கப்பட்டுள்ள இதே போன்ற கருவியையும் முதல்வர் சென்னையிலேயே துவக்கி வைத்தார்.

இந்த அதி நவீன ஸ்கேன் கருவி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது உள்ளது. தற்போது அரசுமருத்துவமனைகளில் வந்துள்ளதன் மூலம் வட மற்றும் தென் தமிழ்நாட்டிள் உள்ள ஏழை, எளிய மக்கள்பலனடைந்துள்ளார்கள்.

இருதயம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளை மிகவும் துல்லியமாக ஸ்கேன் செய்யும் தன்மை கொண்டவைஇந்தக் கருவிகள். பலவித கோணங்களில் நமது உடல் உள்ளுறுப்புகளை இவை ஸ்கேன் செய்வதால் என்னவகையான நோய், நோயின் தன்மை குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X