அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேனர்: துவக்கி வைத்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், ரூ.4.60 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன எம்.ஆர்.ஐ.சி.டி. ஸ்கேன் கருவிகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்த அதி நவீன ஸ்கேன் கருவி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது உள்ளது. தற்போது அரசுமருத்துவமனைகளில் வந்துள்ளதன் மூலம் வட மற்றும் தென் தமிழ்நாட்டிள் உள்ள ஏழை, எளிய மக்கள்பலனடைந்துள்ளார்கள்.
இருதயம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளை மிகவும் துல்லியமாக ஸ்கேன் செய்யும் தன்மை கொண்டவைஇந்தக் கருவிகள். பலவித கோணங்களில் நமது உடல் உள்ளுறுப்புகளை இவை ஸ்கேன் செய்வதால் என்னவகையான நோய், நோயின் தன்மை குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications