புகை பிடிக்கத் தடை: பீடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்து பீடித் தொழிலாளர்கள்செப்டம்பர் 5ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு பீடித் தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம்நடந்தது.

கூட்டத்திற்கு சம்மேளனத் தலைவர் வே.கண்ணன் தலைமை தாங்கினார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில்இருந்தும் இருந்து நிர்வாகிகள் வந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்யும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து பல முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு,

தமிழக அரசின் இந்த திடீர் முடிவால் 10 லட்சம் பீடித் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும்.

எனவே அரசு இந்தத் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும்.

இதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலையைத் தமிழக அரசோ, பீடிக் கம்பெனிகளோ வழங்கமுடியாது. எனவே இதற்கு மாற்றுத்திட்டம் இல்லாமல், தடை செய்யும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது.

இந்தப் பிரச்சனை பற்றி தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பீடிக் கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளைஅழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்.

பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைசெய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரி செப்டம்பர்5ம் தேதி தமிழகம் முழுவதும் பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.

இவ்வாறு அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+