Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைதியாக நடந்தது இந்து முன்னணி விநாயகர் ஊர்வலம் - ராமகோபாலன் கைதாகி விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் ஊர்வல ம் அமைதியாகநடந்து முடிந்தது. ஐஸ்ஹவுஸ் வழியாக ஊர்வலம் செய்ய அனுமதி தரவேண்டும் என்று தர்ணா செய்த இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சனிக்கிழமை முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.சனிக்கிழமை சிவசேனா சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி சென்னையில் விநாயகர்ஊர்வலம் செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சாலைகளில் போக்குவரத்துதடை செய்யப்பட்டிருந்தது.

மதியம் 1.30 மணிக்கு விநாயகர் ஊர்வலம் தொடங்கியது ஊர்வலத்தை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்துவக்கி வைத்தார்.

மாலை 4.30க்கு விநாயகர் சிலைகள் கடற்கரையை சென்றடைந்தன. அங் கொண்டுவரப்பட்டிருந்த 18 அடி உயரவிநாயகர் சிலைக்கு ராம கோபாலன் பூஜை செய்தார். அதன் பின் விநாயகர் சிலைகள் கரையில் கரைக்கப்பட்டன.

ராமகோபாலன் கைது

இதன் பின் ராம கோபாலன் சிறிய விநாயகர் சிலையுடன் திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு வந்தார். ஐஸ் ஹவுஸ்மசூதி வழியாக ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். அதற்குபோலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து ராம கோபாலன் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார்.

இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ராமகோபாலனையும், அவருடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த 31 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து ராமகோபாலன், "சென்ற ஆட்சியிலும் இதே போல்தான் நடந்தது. தற்போது சூழ்நிலை மாறியிருக்கும்என்று நினைத்தேன். ஆனால் மாறவில்லை. பா.ஜ.ஆட்சி செய்து இதுபோல் தடை விதித்தால், அவர்களையும்எதிர்த்து போராடுவேன்" என்றார்.

பின்னர், சில மணி நேரங்களிலேயே ராமகோபாலன் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு வாழ்த்து கோஷம்

விநாயகர் ஊர்வலம் மிகவும் அமைதியாக நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்வர்கள் போலீசாருடன் நன்குஒத்துழைத்தனர் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.

ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ன. வீடுகளில் இருந்து சிறு விநாயகர்சிலைகளும் கொண்டு வரப்பட்டன.

விநாயகர் ஊர்வலத்தையொட்டி சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்த சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பனுக்கு இந்து முன்னணியை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஊர்லவத்தில் வந்த இந்துமுன்னணியினர், "முத்துக்கருப்பன் வாழ்க" என்றும் கோஷமிட்டனர்.

பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+