மூப்பனார் தொடர்ந்து கவலைக்கிடம்
சென்னை:
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின்உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
எலும்பு முறிவு சிகிச்சைக்காக, கடந்த ஜூலை 30ம் தேதி மருத்துவமனையில் மூப்பனார் சேர்க்கப்பட்டார்.ஆபரேஷனைத் தொடர்ந்து, அவர் சிறிது சிறிதாகத் தேறி வந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்குச்சென்று, மூப்பனாரின் உடல் நலத்தை விசாரித்தனர்.
இதற்கிடையே, கடந்த 19ம் தேதி அவருடைய பிறந்த நாளை தமாகாவினர் சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது,மூப்பனார் விரைந்து குணமடைய வேண்டும் என்பதற்காக, கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும்நடைபெற்றன. சிறப்பு ரத்ததான முகாம்களும் தமாகா சார்பில் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பல துறைகளைச்சேர்ந்த மருத்துவர்களும் அடிக்கடி வந்து அவருடைய உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, தொண்டர் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமரி அனந்தனும், முன்னாள் திமுக அமைச்சர் ஆலடிஅருணாவும் மருத்துவமனைக்குச் சென்று, மூப்பனாரின் உடல் நிலையை விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications