பேசத் தயார்: கர்நாடக அரசு
பெங்களூர்:
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து தமிழக அரசுடன் பேச கர்நாடக அரசு தயாராக உள்ளது என்று கர்நாடக மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
காவிரி நதி நீர் ஆணையம் கூடுவதற்கு முன்பாக தமிழக அரசு, எங்களுடன் பேச விரும்புகிறது. இதற்கு கர்நாடகஅரசும் தயாராக உள்ளது.
மேலும், டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்துஇன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கூட்டம் நடக்க இன்னும் 10 நாட்கள் உள்ளதால், அதற்குள் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.இப்போதும் தமிழகத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுதானிருக்கிறது.
மேலும் அங்குள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்து ஆராய நாங்கள் விரும்பவில்லை. இரண்டுமாநிலங்களின் நலன் கருதி நான் இது பற்றி மேலும் கருத்துக் கூற விரும்பவில்லை. இவ்வாறு பாட்டீல் கூறினார்.












Click it and Unblock the Notifications