மீட்கப்பட்ட நகைகள், பொருட்கள் - உரிமையாளர்களிடம் ஜெ. ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுமார் ரூ.1.20 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
862 பவுன் நகைகள், டி.விக்கள், மோட்டார் பைக்குகள் உள்பட திருடு போய் மீட்கப்பட்ட பல்வேறுபொருட்களையும் அந்தந்த உரிமையாளர்களிடம் ஜெயலலிதா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை உடனுக்குடன் மகளிர் காவல்நிலையத்திற்குத் தெரிவிக்கும் பொருட்டு, 2 "ஹெல்ப் லைன்" தொலைபேசிச் சேவை வசதிகளையும் ஜெயலலிதாதுவக்கி வைத்தார்.
ஜெயலலிதா வருகையையொட்டி, போலீசாரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பும் குதிரைப்படைப் போலீசாரின்அணிவகுப்பும் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications