அக்டோபர் முதல் ரயில் கட்டணம் உயருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அக்டோபர் 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் நிதிஸ்குமார் இன்றுமக்களவையில் அறிவித்தார்.

இந்த கட்டண உயர்வால் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ. 5,000 கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கும்.

இந்தத் தொகை ரயில் பயணிகள் பாதுகாப்பு நிதி என்று புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள நிதிக்குப் பயன்படுத்தப்படும்என்று அமைச்சர் கூறினார்.

இது பற்றி அமைச்சர் மேலும் கூறியதாவது,

கடந்த 27ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில் விபத்துகளில் பாதிக்கப்படும் பயணிகள் நிவாரணநிதியாக ரூ.17,000 கோடி வரை ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வு மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நிதியில்சேர்க்கப்படும்.

கட்டண உயர்வு விபரங்கள் வருமாறு,

2ம் வகுப்பில் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு கட்டணத்தில் ரூ.10 அதிகரிக்கப்படுகிறது. 500 கி.மீ.க்கும்மேற்பட்ட பயணத்திற்கு கட்டணத்தில் ரூ.20 அதிகரிக்கப்படுகிறது.

முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. கோச் சேர் காரில் 500 கி.மீ. வரை ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீக்குஅதிகமான தூரத்துக்கு ரூ.40 அதிகரிக்கப்படுகிறது.

3 அடுக்கு பெர்த் வசதி கொண்ட ஏ.சி. கோச்சில் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு கட்டணத்தில் ரூ.30ம், 500கி.மீ.க்கு மேல் ரூ.60ம் அதிகரிக்கப்படுகிறது.

2 அடுக்கு பெர்த் கொண்ட ஏ.சி. கோச்சில் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு பயணக் கட்டணத்தில் ரூ.40ம், 500கி.மீ.க்கு மேல் ரூ.80ம் அதிகரிக்கப்படுகிறது.

சீசன் டிக்கெட் விலை உயர்வு:

மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு முதல் வகுப்பு பயணத்திற்கு ரூ.20ம், இரண்டாம் வகுப்பு பயணத்திற்கு ரூ.10 ம்அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் தனது அறிவிப்பில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+