மனித உரிமை கமிஷன் உறுப்பினாராக முன்னாள் நீதிபதியை நியமித்தது சட்டவிரோதம்:பொன்னையன்
சென்னை:
தனி நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியை மனிதஉரிமை கமிஷன் உறுப்பினராக நியமித்தது சட்டவிரோதமானதுஎன்று தமிழக நிதிஅமைச்சர் பொன்னையன் சட்டசபையில் கூறினார்.
கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட 3 தனி நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ஒரு நீதிபதியின்பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
அதன் பின் அவர் தேர்வாணையக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் மனித உரிமைகமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவியைராஜினாமா செய்துவிட்டு மனித உரிமை கமிஷன் உறுப்பினாராக பதவி ஏற்றார். இந்த பதவி நீதிபதி பதவிக்குஇணையானது.
அரசியல் சட்டம் 319ம் பிரிவின் (டி)யின் படி ஒருவர் மாநில தேர்வாணையத்திலோ, மத்திய தேர்வாணையத்திலோஉறுப்பினராக நியமிக்கப்பட்டால், அவர் மாநில அரசிலோ அல்லது மத்திய அரசிலோ எந்த பதவியும்வகிக்கக்கூடாது.
சட்டம் இவ்வாறு இருக்க, மாநில் தேர்வவாணத்தில் உறுப்பினராக இருருந்தவர் நீதிபதிக்கு இணையான மனிதஉரிமை கமிஷனர் பதவியில் இருந்து நீக்க அரசு பரிந்துரை செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
பொன்னையன் பதில்
பாலசுப்ரமணியத்துக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் பேசும்போது:
இந்த பிரச்சனை குறித்து செவ்வாய்க்கிழமை நான் பதிலளித்துள்ளேன்.
தேர்வாணைய குழு உறுப்பினராக இருந்தவர் மனித உரிமை கமிஷன் உறுபிப்பினராக நியமிக்கப்பட்டது அரசியல்சட்டத்திற்கு முரணானது, சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளேன்.
இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுடன் கலந்து பேசிமுடிவெடுப்பார் என்றார்.