For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பயோ-டெக்னாலஜி பூங்கா: பணிகள் தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தரமணியில் அமைக்கப்பட்டு வரும் பயோ-டெக்னாலஜி பார்க்கின் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இரு மாதங்களில் இந்தப் பூங்கா திறக்கப்பட்டுவிடும் என தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம்சட்டசபையில் தெரிவித்தார்.

முதலீடுகளை அதிகரிக்கவும் வேலைவாய்ப்பைப் பெருக்கவும் புதிய தொழிற்கொள்கையை தமிழக அரசுஉருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது,

தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் புதிய தொழிற்கொள்கைகளைஉருவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது.

இதற்காக வல்லுநர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர்இந்தக் கமிட்டியின் தலைவராக இருப்பார்.

இந்தக் கொள்கை ஏற்றுமதியைப் பெருக்கும் விதத்திலும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதத்திலும்இருக்கும்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு தமிழ்நாட்டில் உயிர்- தொழில்நுட்பப் பூங்கா(பயோ-டெக்னாலஜி பார்க்) அமைப்பதிலும் அக்கரை காட்டி வருகிறது. இதற்காக தரமணியில் அரசு நிறுவனமான"டிட்கோ" உதவியுடன் இந்தப்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ஆலோசனைகளை அமெரிக்காவில்உள்ள கார்னெல் பல்கலைக்கழகம் வழங்க முன்வந்துள்ளது.

வரும் டிசம்பர் மாதத்தில் இது செயல்படத் துவங்கும்.

மேலும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டுரங்கன் கூறியதாவது,

கடந்த திமுகஆட்சியில் நசுக்கப்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இந்த ஆட்சியில் புத்துயிர் பெரும்.

கடந்த 1996 முதல் 2000 ம் ஆண்டு வரை இந்த நிறுவனங்களில் வளர்ச்சி 6.92 லிருந்து 4.14 ஆக குறைந்து விட்டது.

அதேபோல உற்பத்தியும் 15.66 லிருந்து 10.41 ஆக குறைந்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் 19 தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்டன. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் ஒன்று கூடஉருவாக்கப்படவில்லை. இவ்வாறு பாண்டுரங்கன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X