வீரப்பனைப் பிடிக்க புதிய வியூகம்?
பெங்களூர்:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் புதிய வியூகம் அமைப்பது குறித்து கர்நாடக போலீஸ் அமைச்சர் கார்கேயை கூட்டுஅதிரடிப்படை தலைவர் வால்டர் தேவாரம் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிரடிப்படையினர் புதிய வியூகம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல குழுக்களாகபிரிந்து நவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம் வியாழக்கிழமை பெங்களூர் வந்தார். அவர் பெங்களூர்ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டிற்கு சென்றார்.
அங்கு கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. இந்த கூட்டம் சுமார் 30 நிமிட நேரம் நடைபெற்றது.
வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க புதிய மாற்று திட்டம் இந்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகதெரிகிறது.
ஆனால், "இது வழக்கமான சந்திப்புதான். இதில் முக்கியத்துவம் எதுவும் இல்லை" என்று நிருபர்களிடம் கூறினார்கார்கே.












Click it and Unblock the Notifications