ஜெ. பதவி விலக வேண்டும்: சுவாமி கோரிக்கை
சென்னை:
டான்சி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா முதல்வர்பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சி மற்றும் பிளசண்ட் ஸ்டேஓட்டல் வழக்குகள் மீதான அப்பீல் மனுக்களை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, முதல்வர்ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அன்றைய தமிழக கவர்னரால் முதல்வராக ஜெயலலிதா பதவி பிரமானம் செய்துவைக்கப்பட்டார்.
இப்போது டான்சி வழக்கி விசாரணையை தொடர்வதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு சுவாமி தனது அறிக்கையில் கூறினார்.