24ம் தேதி அமெரிக்காவில் வாஜ்பாய்-புஷ் சந்திப்பு
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க செல்லவிருக்கும் இந்தியபிரதமர் வாஜ்பாய் வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடனுடம், 25ம்தேதி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புடனும் பேச்சு வார்த்தைநடத்தவுள்ளார்.
புஷ் அதிபரான பின் அவரை வாஜ்பாய் சந்தித்து பேசவிருப்பது இதுவே முதல் முறை.
வாஜ்பாய்- புஷ் பேச்சவார்த்தைக்கான இடம், நேரம் உள்ளிட்ட அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஜ்பாய்-புஷ் பேச்சு வார்த்தையின் போது இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேசவிவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
அமெரிக்க காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்திய அரசின் மீது அமெரிக்கா விதித்துள்ளதடையை விலக்க வேண்டும் புஷ்ஷை வற்புறுத்தி வரும் நிலையில் புஷ் - வாஜ்பாய்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அதன் பின் 25ம் தேதி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை சந்தித்து வாஜ்பாய்பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கடந்த ஜுலை மாதம் ஆக்ராவில் நடந்த வாஜ்பாய் - முஷாரஃப் பேச்சுவார்த்தைதோல்வியடைந்த பின் இரு நாட்டு தலை வர்களும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
25ம் மாதம் தேதி வாஜ்பாய் ஐக்கிய நாடுகள் சபையில் பேசுகிறார்.
வாஜ்பாய் 26ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார்.
இந்திய அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர்புஷ் அடுத்த ஆண்டு இந்தியாவரவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications