த.மா.கா. தலைவராக மூப்பனார் மகன் வாசன் தேர்வு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைவையடுத்து, அவரது மகன் கோவிந்தவாசன் அக்கட்சியின்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டத்திற்கு முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான எஸ்,ஆர்,பாலசுப்ரமணியம் தலைமைதாங்கினார். சமீபத்தில் ராஜ்யசபை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜி.வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கட்சியின் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் கோவிந்தவாசன் த.மா.காவின்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து த.மா.கா. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மறைந்த தலைவர்மூப்பனாரின் மறுவார்ப்பான கோவிந்த வாசன் ஒருமனதாக கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுப்பட்டார்.
இதன் மூலம் மறைந்த தலைவர் மூப்பனாரின் லட்சியப் பாதையில் பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மூப்பனாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்,காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அனைத்துத் தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும்,தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் த.மா.கா. சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மூப்பனார் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.