For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மகனின் தலையை வெட்டிக் கொன்ற தந்தை கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் மகன் தன்னை கண்டித்ததால் அவரது தலையைத் துண்டித்து கொலை செய்தார் தந்தை. மனதைகலக்கும் இந்த சம்பவம் வட சென்னை பகுதியில் உள்ள வியாசர்பாடியில் நடந்துள்ளது.

வட சென்னையில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் . இவர் ஒரு நகை தொழிலாளி. இவரது மனைவிசாந்தி. இவர் மனைவி, 3 மகன்கள், மகள், மாமியாருடன் வியாசர்பாடியில் வசித்து வந்தார்.

வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக ஊர் சுற்றி வந்தார். இதனால் சந்திரசேகரை கண்டித்தார் அவரது மகன்சுந்தரம் (20). மகன் தன்னை கண்டிப்பதா என்று ஆத்திரமுற்ற சந்திரசேகர் ஆத்திரமடைந்தார்.

நள்ளிரவுக்கு மேல் எழுந்த சந்திரசேகர், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மகனின் தலையை அறுத்துக் கொன்றார்.பிறகு, மகனின் தலையை பூஜையறைக்கு சென்று வைத்து விட்டு அவரும் அங்கேயே அமர்ந்து கொண்டார்.

கணவனின் வெறிச் செயலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து போலீசில் புகார் கூறினார். இந்தபுகாரின் பேரில், சந்திரசேகரைக் கைது போலீசார் கைது செய்தனர்.

கடவுள் தன் கனவில் வந்து, மகனைக் கொல்லுமாறு கூறியதால், சுந்தரத்தைக் கொன்றேன் என்று சந்திரசேகர்போலீசாரிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X