For Daily Alerts
Just In
வீரப்பனுக்கு உதவிய தீவிரவாதி தஞ்சையில் கைது
தஞ்சாவூர்:
சந்தன வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை கொடுத்து உதவியதாகக் கூறப்படும் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த பரஞ்சோதி என்ற எழுமலை தஞ்சாவூரில் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, போலீசார் நடத்திய வேட்டையின்போது, தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த பரஞ்சோதி (28) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பரஞ்சோதி, சத்தியமங்கலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பரமணியம்முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
பரஞ்சோதியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தல் சம்பவத்திலும் இவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Comments
Story first published: Monday, September 3, 2001, 5:30 [IST]