மேலும் குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 44 அடிதான் இருந்தது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்த காரணத்தாலும், காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி நீரை கர்நாடகம்திறந்துவிடாத காரணத்தாலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.
மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் நீர் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. அதன் பின்தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருக்கும் குறுவை பயிர்களுக்கும் நீர் திறந்து விட முடியாது.குறுவை பயிர்கள் பிழைக்க வேண்டுமானால் இந்த மாதம் இறுதி வரை நீர் தேவை.
மேட்டூர் அணை வற்றி வரும் நிலையில் குறுவை பயிர்கள் பிழைக்குமா என்ற இமாலய கேள்வி விவசாயிகள்மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பஞ்சத்தை எவ்வாறு சமாளிப்பது, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகளை எடுப்பதுஎன்பது குறித்து ஆலோசிப்பதற்காக, திருச்சி-தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்ட கலெக்டர்கள் கூடி திருவாரூரில்விவாதிக்க உள்ளனர்.
வரும் 6ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்றுவிவசாயிகளும், தமிழக மக்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.