Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்சி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடரக் கோரும் ஜெ. மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டான்சி வழக்கு விஷயத்தில், உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்துநடத்தக் கோரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.

டான்சி நிலத்தை வாங்கியதில் முறைகேடு செய்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே" ஓட்டல் வழக்கிலும்ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.

இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 27ம் தேதி ஆரம்பமானது.

3 நாட்களாக நடந்துகொண்டிருந்த இந்த விசாரணையை நிறுத்தக் கோரி அரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

இந்த அப்பீல் வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களையும் தனக்கு வழங்கவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத்திலேயே இந்தவழக்கு நடப்பது, மக்கள் மத்தியில் நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்பும்.

எனவே, இந்த அப்பீல் வழக்கை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேன்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சிவழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நறுத்த வேண்டும் என்று இடைக்காலத் தடை விதித்தது.

இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் நேற்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

டான்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று அம்மனுவில்கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், "டான்சி வழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை எதிர்த்து ஜெயலலிதாதாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்நடைபெறவுள்ளது.

அதுவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்துநடத்த அனுமதி அளிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி பரூச்சா இம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+