டான்சி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடரக் கோரும் ஜெ. மனு தள்ளுபடி
டெல்லி:
டான்சி வழக்கு விஷயத்தில், உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்துநடத்தக் கோரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.
இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 27ம் தேதி ஆரம்பமானது.
3 நாட்களாக நடந்துகொண்டிருந்த இந்த விசாரணையை நிறுத்தக் கோரி அரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
இந்த அப்பீல் வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களையும் தனக்கு வழங்கவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத்திலேயே இந்தவழக்கு நடப்பது, மக்கள் மத்தியில் நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்பும்.
எனவே, இந்த அப்பீல் வழக்கை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேன்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், டான்சிவழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை நறுத்த வேண்டும் என்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் நேற்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
டான்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று அம்மனுவில்கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், "டான்சி வழக்கில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை எதிர்த்து ஜெயலலிதாதாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்நடைபெறவுள்ளது.
அதுவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்துநடத்த அனுமதி அளிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி பரூச்சா இம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications