சட்டசபையில் நடிகர் நெப்போலியன் கன்னிப் பேச்சு
சென்னை:
செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பிரபல நடிகரும்,வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன் தனது கன்னிப் பேச்சை ஆரம்பித்தார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறைகளின் நிதிநிலை அறிக்கையில் "திரைப்படத்துறை" என்ற வார்த்தையேபணன்படுத்தப் படவில்லை. இது வேதனைக்குரிய விஷயமாகும்.
நலிவடைந்துவரும் திரைப்படத்துறையை மீண்டும் சரி செய்ய, திரைப்படத்துறையிலிருந்து ஆட்சிக்கு வந்திருக்கும்முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முயற்சி செய்வார் என்று நம்பினோம். ஆனால், முதல்வர் அந்த முயற்சிகளைமேற்கொள்ளவில்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கைகள் மூலம் தெளிவாகிறது.
"எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்ற பெயரை மாற்றி, "எம்.ஜி.ஆர். திரைப்பட அறிவு நகர்" என்று அதிமுக அரசுவைத்துள்ளது. இதை மீண்டும் "எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்று மாற்ற வேண்டும்.
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அவரது வீட்டருகிலேயே சிலை அமைக்க அரசு முன்வர வேண்டும். மேலும்சிவாஜியின் பெயரில் தபால் வெளியிட தமிழக அரச மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்ப வேண்டும்.
பழம்பெரும் நடிக, நடிகைகளான எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி மற்றும் மனோரமா ஆகியோருக்கு மத்தியஅரசின் பத்மஸ்ரீ விருது கிடைக்க தமிழக அரசு சிபாரிசு செய்ய வேண்டும்.
இவ்வாறு நடிகர் நெப்போலியன் சட்டமன்றத்தில் தனது கன்னிப் பேச்சின்போது கூறினார்.












Click it and Unblock the Notifications