மக்கள் தீர்ப்பை ஆளுநர் ஏற்றால் சட்டம் எதற்கு? - நீதிபதிகள் பெஞ்ச்
டெல்லி:
"மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான், ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி,முதல்வராகப் பதவியில் அமர்த்தினார் என்றால், சட்டங்கள் எல்லாம் எதற்கு?" என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன பெஞ்ச் கேள்விக் கணை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் வேணுகோபால் தன்னுடைய வாதத்தில்,
"தேர்தலில் போட்டியிட முடியாமல் போனாலும், ஜெயலலிதாவின் தலைமையை மக்கள் விரும்பினார்கள். அதன்எதிரொலியாகவே, கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
அதிமுக வெற்றி பெற்றால், ஜெயலலிதாதான் முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது. அதை மனதில் கொண்டு,மக்களும் தங்களுடைய தீர்ப்பை வழங்கி, அதிமுகவை வெற்றி பெறச் செய்தனர்.
மக்களுடைய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், அப்போதைய ஆளுநர் ஜெயலலிதாவையேமுதல்வராக்கினார். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துள்ளார் ஆளுநர். இதில் தவறு ஒன்றும் இல்லை.
மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை இறுதியானது அல்ல. தனி நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். அது தற்போதும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அவர் தண்டனை பெற்றவர் என்று கூறுவது சரியல்ல. அதனால், இதைக் காரணமாக வைத்துஜெயலலிதா முதல்வர் பதவியைத் தொடரக் கூடாது என்று கூற முடியாது.
தவிர, பதவி ஏற்ற 6 மாதங்கள் வரை ஒருவர் முதல்வர் பதவியிலோ அல்லது மந்திரி பதவியிலோ நீடிப்பதற்குச்சட்டத்தில் இடமுள்ளது.
அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா பதவி ஏற்று இன்னும் 6 மாதம் ஆகாத நிலையில், அவரைப் பதவியில்இருந்து இறக்க முடியாது" என்று கூறி வாதாடினார் வேணுகோபால்.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் பெஞ்ச், "மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துதான் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்றால், நாட்டில் சட்டங்கள் எதற்கு உள்ளன?" என்று கூறியது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஜெயலலிதா தரப்பிலான வாதத்தை வேணுகோபால் நாளையும்தொடர்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பெஞ்ச் கேட்ட கேள்விகளுக்கு, அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அடுத்தசெவ்வாய்க்கிழமைதான் பதில் அளிப்பார் என்று தெரிகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications