தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு அல்-உம்மா வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு அல்-உம்மா இயக்கத்தினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த ரயில் நிலையத்தைக் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக, டெலிபோன் மூலமாகவும் தொடர்ந்துமிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்பட அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகேஅனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே போலீசாரும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பதையும், அனுப்பியவர்கள் யார் என்பது பற்றியும் போலீசார்விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications