சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அபிராமபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இதனால் அருகாமையிலிருக்கும் வீடுகள் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், புதிதாக கட்டப்பட்டு வரும்கட்டிடத்தின் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களை அழைத்து பேசினர். அவர்கள்,"கட்டுமானப்பணியால் வீடுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. அதற்கு நாங்கள் பொறுப்பு" என்று கூறியபின் மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக, அந்தப் பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications