அக்காவுக்குப் பதில் மணமகளாகிய தங்கை
வேதாரண்யம்:
திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணப்பெண் காணாமல் போனதால், மணப்பெண்ணின் தங்கை மணமகளானார்.
மருதூர் தெற்கு பூவன்காடில் வசித்துவரும் சாமிநாதன் என்பவரின் மகனான சேகருக்கும், கோமதிக்கும் திருமணம்நிச்சயம் செய்யப்பட்டது. இந்த திருமணம்நேற்று (வெள்ளிக்கிழமை)மணமகள் வீட்டில் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாளான வியாழக்கிழமை மணமகள் கோமதி காணாமல் போனார்.வியாழக்கிழமை நள்ளிரவு உறவினர்கள் கோமதியைத் தேடினர். ஆனால் கோமதி வீட்டில் இல்லை.
இதையடுத்து திருமணத்திற்கு வந்திருந்த பெரியோர் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய போது, கோமதியின்தங்கை பிருந்தாவை, மணமகன் சேகருக்கு மணமுடித்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
அக்காவுக்கு பதில் தங்கை மணமகளானார். வெள்ளிக்கிழமை காலை சேகருக்கும், பிருந்தாவுக்கும் திருமணம்இனிதே நடந்தேறியது.
திருமணம் முடிந்த பின், தன் மகள் கோமதி 18 பவுன் நகைகளுடன் காணாமல் போய்விட்டதாக வாய்மேடுபோலீசில் புகார் கொடுத்தார் தந்தை தட்சிணாமூர்த்தி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.