ஜெ.மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரும் சுயேச்சை எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளை ரத்து செய்வதோடு, தனிக்கோர்ட்டுகளையும் கலைத்துவிட்டு, அவரேஆட்சியைத் தொடர சட்டசபை வழிவகுக்க வேண்டும் என்று ராதாபுரம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் அப்பாவுசட்டசபையில் கூறினார்.

சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.இதில் கலந்துகொண்டு அப்பாவு கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி 2 விதமாக செயல்படுபவர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள அரசுக்குச் சொந்தமானநிலத்தை அப்போது கலெக்டராக இருந்த ஒருவர் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதையடுத்து அந்தக்கலெக்டர் மீது எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் கடந்த 1989ம் ஆண்டு முதல்வரான கருணாநிதி, தான் பதவியேற்றவுடன், அதே கலெக்டருக்கு மீண்டும்பதவி கொடுத்துப் பணியில் அமர்த்தினார்.

டான்சி நில விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீது பல வழக்குகளைப் போட்டு,அவற்றை விசாரிக்கத் தனிநீதி மன்றமும் ஏற்படுத்தியவரும் கருணாநிதிதான். இதன் மூலம் அவருடைய இரட்டைவேடம் பொதுமக்களுக்கு நன்கு விளங்கும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா பொமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெரும்வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால் சட்டம் அவரை பதவியில் நீடிப்பதை எதிர்க்கிறது.

எனவே, ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள ஜோடிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சட்டசபை ரத்து செய்யவேண்டும். மேலும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றங்கள் அனைத்தையும் கலைக்க வேண்டும்.இதற்கான அதிகாரம் சட்டசபைக்கு உண்டு.

முன்பு ஒருமுறை பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்த போது, அன்பழகன் உள்ளிட்ட எதிர்கட்சியினர் சட்டநகலை எரித்தார்கள். உடனே, அவர்களின் உறுப்பினர் பதவியை பறித்து அவர்களை அனுப்பி வைத்தார்பாண்டியன். ஆனால், அவர்கள் தற்போது தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆகியுள்ளனர்.

மேலும், சென்ற மாதம் கொலை செய்யப்பட்ட பூலான் தேவி மீதிருந்த வழக்குகள் எல்லாவற்றையும், அன்றையபிரதமர் வி.பி. சிங் ரத்து செய்து, தேர்தலில் நிற்க வகை செய்தார்.

மக்கள் ஆதரவைப் பெற்றவர்கள்தான் நாட்டை ஆளவேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவேஇதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அப்பாவு எம்.எல்.ஏ. பேசினார். தற்போது சுயேச்சை உறுப்பினராக இருந்தாலும், இவர் முன்னாள் தமாகாஉறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+