For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்டெய்னர் தலைகீழாக கவிழ்ந்ததில் 2 பேர் நசுங்கி சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவரும், கிளீனரும் உடல் நசுங்கி இறந்தனர்.

சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னர்லாரி இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமைநள்ளிரவு சேலத்திற்கு கிளம்பியது.

சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (26). இவர்தான் கன்டெய்னரின்டிரைவர். கன்னியாகுமரியைச் சேர்ந்த விக்டர் (22) என்பவர் அந்த கன்டெய்னரின் கிளீனராக இருந்தார்.

துறைமுகத்திலிருந்து கன்டெய்னரை சேலம் நோக்கி வேகமாக ஓட்டி வந்து கொண்டிருந்தார் சுந்தரபாண்டியன்.இந்த கன்டெய்னர், ராயபுரம் மேம்பாலம் இப்ராகீம் ஷா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்ப்பட்டவளைவில் கன்டெய்னரை அவர் திருப்ப முயன்றார்.

ஆனால் எதிர்பாராத விதமாக கன்டெய்னர் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் சுந்தரபாண்டியனும், விக்டரும்கன்டெய்னரின் அடியில் சிக்கி நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்துஇறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X