சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி பி. சுபாஷண்ரெட்டி (58) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சனிக்கிழமைபிற்பபித்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், டான்சி நில பேர ஊழல் வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல்செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அரசுசிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான அப்பீல்மனுவுக்கு இடைக்கால தடை விதித்தது.
டான்சி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனுமீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி ஜெயலலிதாதரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை தற்போது விசாரித்துவரும்பாலசுப்ரமணியத்திற்கு பதிலாக வேறு ஒரு நீதிபதி விசாரிப்பார் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்துக்குப்புதிதாகப் பதவியேற்கவிருக்கும் தலைமை நீதிபதிதான் இந்த நீதிபதியைத் தேர்வு செய்வார் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆந்திர நீதிபதி சுபாஷன் ரெட்டி தற்போதுநியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பவர் என்ற பெயர் பெற்றவர்.
ஜனாதிபதியின் முறைப்படியான உத்தரவு திங்கள்கிழமை இவருக்கு அளிக்கப்படும். வரும் வியாழக்கிழமைஅல்லது வெள்ளிக்கிழமை சுபாஷன் ரெட்டி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் வந்துதான் டான்சி நில பேர ஊழல் தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை விசாரிக்க புதியநீதிபதியை நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.