உள்ளாட்சித் தேர்தல்: 11ம் தேதி கூடுகிறது பாமக பொதுக்குழு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம், வரும் 11ம்தேதி அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பாமகவும் தனது பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின்தலைவர் ஜி.கே.மணி, "கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில், வரும் 11ம் தேதி பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் அந்தக் கூட்டத்தில்விவாதிக்கப்படும்" என்று கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.இருப்பினும், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய மறுத்துள்ளது.
இந்நிலையில் மதிமுகவுடன் பாமக கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து பாமகதரப்பில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications