For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் மனு கொடுத்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியிலிருந்து தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீரையாவது தமிழகத்து கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்றுகோரும் மனுவை, திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தது தமிழக அனைத்துக் கட்சிக் குழு.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்த இந்தக் குழு, காவிரியிலிருந்து உடனடியாக தமிழகத்திற்குத் தண்ணீர் விடக் கோரிகர்நாடகத்தை வற்புறுத்துமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியது.

தமிழக அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், தம்பிதுரை, தமாகாவின் ஞானசேகரன், எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்,திமுகவின் அசோகன் உள்பட 44 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் தவிர, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த மனு மீது, வாஜ்பாய் என்ன நடவடிக்கை எடுத்தார் அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுகுறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X