For Daily Alerts
Just In
அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் மனு கொடுத்தது
சென்னை:
காவிரியிலிருந்து தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீரையாவது தமிழகத்து கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்றுகோரும் மனுவை, திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தது தமிழக அனைத்துக் கட்சிக் குழு.
தமிழக அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், தம்பிதுரை, தமாகாவின் ஞானசேகரன், எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்,திமுகவின் அசோகன் உள்பட 44 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தவிர, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த மனு மீது, வாஜ்பாய் என்ன நடவடிக்கை எடுத்தார் அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுகுறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
Comments
Story first published: Monday, September 10, 2001, 5:30 [IST]