கருணாநிதி கைது சம்பவம்: ராமன் கமிஷன் முன் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம்
சென்னை:
நீதிபதி ராமன் கமிஷன் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது சம்பவத்தில் தொடர்புடையபோலீஸ்அதிகாரிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
நீதிபதி ராமன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணையை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்நிலையில்நேற்று (திங்கள்கிழமை) கைது சம்பவத்தில் தொடர்புடைய 21 போலீஸ் அதிகாரிகள் அவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களில் மத்திய சென்னை இணை கமிஷனரும், மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டவருமான ஜார்ஜ்குறிப்பிடத் தக்கவர். மேலும், துணைக் கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், பிரபாகரன், சமுத்திர பாண்டிஆகியோரும், உதவிக்கமிஷனர்கள் 3 பேரும், 10 இன்ஸ்பெக்டர்களும் நீதிபதி முன் ஆஜரானார்கள்.
அப்போது அவர்கள் அனைவரும் அளித்த வாக்கு மூலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது விதிமுறைகள் மீறப்படவில்லை என்றார்கள். மேலும், உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு ஏற்றவாறுதான்கருணாநிதி கைது சம்பவத்தில் நடந்து கொண்டோம் என்றும் போலீ"ஸ் அதிகாரிகள் வாக்குமூலத்தில்தெரிவித்தனர்.
பின்னர் கருணாநிதி கைது செய்ப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளிட்ட கோப்புகளைகமிஷன் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று கைது சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 60போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications