கர்நாடக முதல்வரிடம் பேசுகிறார் வாஜ்பாய்
டெல்லி:
தமிழகத்துக்கு காவிரி நதி நீர் வழங்குவது பற்றி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசுவதாக பிரதமர் வாஜ்பாய்உறுதி அளித்துள்ளார்.
அந்த ஆணையத்தின் தீர்ப்புப்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர்திறந்துவிட வேண்டும். ஆனால் ஒரு ஆண்டு கூட கர்நாடகத்திலிருந்து இந்த அளவு தண்ணீர்திறந்துவிடப்பட்டதில்லை. இந்த ஆண்டும் வெறும் 51.11டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
இதனால் தமிழகத்தில் காவிரி நீர் பாயும், தஞ்சை, நாகை, திருச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள குறுவைபயிர்கள் கறுகிவிடும் அபாயம் எழுந்துள்ளது. இந்த அபாயத்திலிருந்து விவசாயிகளை காக்க எப்படியாவது,காவிரி நீரைப் பெற வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து காவிரி நதி நீர் ஆணைத்தின் கூட்டத்தைக் கூட்ட, அதன் தலைவரான பிரதமரைக் கேட்டுக்கொண்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 6ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதைத்தொடர்ந்து தமிழத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இதற்கு அனைவரின் கருத்துக்கள்கேட்கப்பட்டது. பிறகு அனைத்துக் கட்சியினரும் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி நேற்று (திங்கள் கிழமை) மாலை பிரதமரைச் சந்தித்து தமிழகத்திற்கு வழங்கவேண்டிய காவிரி நீரைவழங்குமாறு, கர்நாடக அரசிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்அதை ஏற்று, இதுகுறித்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.
பிறகு அனைத்துக்கட்சியினரும் கூடி, எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியாகாந்தியையும் சந்திக்க வேண்டும் என்று முடிவுசெய்தனர்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தங்கள் கட்சித் தலைவி சோனியா காந்தி சொன்னால் கேட்பார் என்று கருதி,சோனியாவிடமும் தமிழகத்தில் வாடும் பயிர்களின் நிலைமை பற்றி எடுத்துரைக்க முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை அனைத்துக் கட்சிக் குழுவினர் சோனியா காந்தியைச் சந்திக்கிறார்கள்.