வெளி மாநிலங்களுக்கு நெல், அரிசி அனுப்ப இனி தடை இல்லை
சென்னை:
தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு நெல் மற்றும் அரிசி ஆகியவை அனுப்பப்படுவதற்குவிதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு முழுமையாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு நெல் மற்றும் அரிசி அனுப்பப்படுவது கடந்த 25ஆண்டுகளாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தத் தடையை நீக்க அமைச்சரவைக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தத் தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
சட்டவிரோதமாக நெல் கடத்தப்படுவதைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் "செக் போஸ்ட்" அமைக்கப்பட்டு,அதில் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.
இப்போது இந்தத் தடையை அரசு நீக்கி இருப்பதால், அதுபோன்ற செக் போஸ்ட்டுகள் அனைத்தும் இனிசெயல்படாது. மேலும், அங்கு பணியாற்றி வந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகள், தாங்கள் முன்பு வேலை செய்ததுறைகளுக்கே மீண்டும் அனுப்பப்படுவார்கள்.
இதன் மூலம், வியாபாரிகளும், அரசின் குடிமைப்பொருள் வழங்கல் கழகமும் விவசாயிகளிடமிருந்து நெல்லைநேரடியாக கொள்முதல் செய்ய வகைசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ரூ.530 என நிர்ணயித்துள்ளது. இந்த விலையைவிட ரூ.40 அதிகமாகக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நெல்லைக் கொள்முதல் செய்யும்.
தமிழக அரசின் இந்த நேரடி நெல் கொள்முதல் திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றுஜெயலலிதா கூறினார்.