சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடல்
சென்னை:
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்துசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மூடப்பட்டது. மேலும் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் சென்னை ஆகியஇடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டன.
சென்னையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ளது அமெரிக்கத் தூதரகம். இந்த அலுவலகத்திற்கு ஏற்கனவேஉள்ள பாதுகாப்புகளைவிட இப்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க சென்னை மாநகரக் கமிஷ்னர் முத்துக்கருப்பன்உத்தரவிட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்க மக்களின் வசதிக்காக, அமெரிக்காவில் நடந்ததாக்குதல்கள் குறித்துத் தெரிந்து கொள்வதற்காக 8112000 என்ற தொலைபேசிவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்த அலுவலகத்தில் 20 போலீசார் காவலுக்கு இருப்பார்கள். தற்போது, 50க்கும் மேற்பட்ட போலீசார்அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த அலுவலகம் இன்று (புதன்கிழமை) இயங்காது என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன.