இந்தியா, உலக நாடுகள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கண்டனம்தெரிவித்துள்ளன.
இந்தக் கொடுமையான தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடுமையான கண்டனத்தை இந்தியாதெரிவிக்கிறது. மேலும், இதுபோன்ற தீவிரவாதச் செயல்களுக்கு இந்தியா எப்போதுமே துணை போகாது.
இத்தாக்குதலில் பலியான பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புச் செயல்களுக்கு இந்தியா எப்போதும் துணையாக நின்று தோள் கொடுக்கும்என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாலஸ்தீனம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, மியாமி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும், இந்தத் தீவிரவாதச்செயல்களுக்கு எதிரான கண்டனக் கணைகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.












Click it and Unblock the Notifications