கோலாலம்பூர் கட்டிடத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்
கோலாலம்பூர்:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலகிலேயே மிகஉயரமான கட்டிடத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் போன் வந்துள்ளது.
88 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் இரட்டைக் கட்டடங்களைக் கொண்டது. இவற்றின் உயரம் 452 மீட்டர்.இரட்டைக் கட்டிடங்களில் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டள்ளது என்று அந்த தொலைபேசி மிரட்டல் வந்தது.அமெரிக்காவில் வெடிகுண்டு வெடித்த சில மணி நேரத்தில் இந்த மிரட்டல் வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்தக் கட்டிடங்களை 2 மணி நேரம் போலீசார் கடுமையாக சோதனைபோட்டார்கள்.
கோலாலம்பூர் நகர போலீஸ் அதிகாரி முகமது பக்ரி இதுபற்றிக் கூறுகையில், கட்டிடங்களை முழுமையாகச்சோதனை செய்த பிறகு எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தோம்.
அதன் பின்புதான் அந்தக் கட்டிடத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் கடைக்காரர்களை உள்ளே செல்லஅனுமதித்தோம் என்றார்.
மேலும் இந்த கோலாலம்பூர் இரட்டைக் கட்டிடம் மாண்டரி என்ற ஓட்டலுக்கு அருகே இருக்கிறது. அங்கு தான்கடந்த வாரம் முதல் அமெரிக்க ராணுவ அதிகாரிகளின் மாநாடு நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா வந்திருந்த அமெரிக்க ராணுவத் தலைமை அதிகாரி எரிக் சின்ஸ்கி,தாக்குதல் பற்றிக் கேள்விப் பட்டதும் உடனே அமெரிக்காவிற்குத் திரும்பி விட்டார்.