ஆனந்த வெள்ளத்தில் பாலஸ்தீனியர்கள்
லெபனான்:
அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டனில் கடத்தப்பட்ட 4 விமானங்களைக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியதை உலகமே வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பாலஸ்தீனியர்கள் இத்தாக்குதலைமகிழ்ச்சி ஆரவாரத்தோடு கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தற்போது தீவிரவாதிகள் அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அவற்றைக்கொண்டு அந்நாட்டின்முக்கிய வர்த்தக நிலையமான உலக வர்த்தக மையத்தின் மீதும், மற்றொரு விமானத்தைக் கொண்டு பென்டகனிலும்மோதினார்கள்.
இந்தத் தாக்குதலில் 110 மாடிகளைக்கொண்ட இரட்டைக் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது.10,000க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பென்டகனில் 800 பேர் வரை பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகளின் இந்நச்செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளன. பாலஸ்தீனஅதிபர் யாசர் அராபத்தும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்நாட்டிலிருந்து லெபனான் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள பாலஸ்தீனியர்கள், மகிழ்ச்சியுடன்கொண்டாடுகிறார்கள். அவர்கள் அனைவரும் சாலைகளில் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நூற்றுக்கணக்கானவர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் ஆரவாரம் செய்தார்கள்.
தீவிரவாதிகளால் அமெரிக்கா கடுமையான தாக்குதலுக்குள்ளானதால், பாலஸ்தீனியர்கள் ஆனந்த வெள்ளத்தில்மிதந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications