For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களை அடுத்து, இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள்அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த முடிவு, செவ்வாய்க்கிழமை இரவு, பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். அவர் மேலும்கூறியதாவது:

நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும், உயரமான கட்டடங்களிலும்பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளின் இந்தச் செயல் மனிதத் தன்மைக்கே சவாலாகும். தீவிரவாதத்தையே அவர்கள் அரசியல்ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் நடந்துள்ள இந்தச் சம்பவங்களின் மூலம், மனித குலமே ஒற்றுமையாக நின்று இந்தச் சவாலைஎதிர்த்துப் போரிட வேண்டும்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அமெரிக்கா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா துணை புரியும்என்றார் அத்வானி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X