தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியா, இஸ்ரேல்?
அமெரிக்காவில் தற்போது தாக்குதல் நடத்தியுள்ள தீவிரவாதிகள், தங்களுடைய அடுத்தகட்ட தாக்குதல்களைஇந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது தொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா தாக்குதலுக்குள்ளான பிறகு, பாலஸ்தீனத்தில் சில அமைப்பினர் சந்தோஷத்தில், ஆடிப்பாடிமகிழ்ந்தனர். பலர் வானை நோக்கி துப்பாக்கிகளால் வெடித்து, தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்துமே, முஸ்லீம் தீவிரவாதியான பின் லேடன்தான் தாக்குதல் சம்பவங்களுக்குக்காரணம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.
உண்மையிலேயே இந்தத் தாக்குதல்களுக்கு பின் லேடன்தான் காரணம் என்னும் பட்சத்தில், அவருடைய அடுத்தஇலக்கு நிச்சயம் இஸ்ரேல் மற்றும் இந்தியா என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளைத்தான் "3 சைத்தான்கள்" என்று பின் லேடன் கூறிவருகிறார். இந்தியா, முஸ்லிம்களுக்கு எதிரான நாடு என்கிறான் பின் லேடன்.
அமெரிக்காவில் நடந்த தாக்குதலையடுத்து உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்களை இஸ்ரேல் மூடிவிட்டது.
சில அரபு நாடுகளில் இந்தத் தாக்தகுதலுக்கு ஆதரவாக பேசிய பலரும் அடுத்த இலக்கு இஸ்ரேலும் இந்தியாவும்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications