For Quick Alerts
For Daily Alerts
Just In
நியூயார்க் மீதான தாக்குதலில் 50 வங்கதேசத்தினர் பலி
டாக்கா:
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தரைமட்டமாகியகட்டடத்தின் இடிபாடுகளுக்கிடையே வங்கதேச மக்கள் 50 பேருடைய உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மொத்தம் 5 லட்சம் வங்க தேச மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் நிலை குறித்துவிவாதிக்கவும், நியூயார்க்கில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் குறித்தும் விவாதிக்கவும் இன்று(வியாழக்கிழமை) மாலை அமைச்சரவை கூட்டத்தை கூட்டப்படவுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் வங்கதேச மக்களில் பலரும் உணவு விடுதிகளிலும், உலக வர்த்தக மையத்திலும்பணியாற்றி வருபவர்கள்.
"தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது. தாக்குதலால் பாதிப்படைந்துள்ள அமெரிக்க மக்களுக்குஎன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் வங்கதேசத்தின் இடைக்கால அரசு தலைவர்லட்டிஃபர் ரஹ்மான்.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]