For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோடியம் விளக்கும்... மண்ணெண்ணெய் விளக்கும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி காலத்தில் சோடியம் வேப்பர் விளக்குகளைபொருத்தியதன் மூலம் மட்டும் அரசுக்கு ரூ 21.26 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாகவும்,இது தவிர்த்திருக்க வேண்டிய அனாவசிய செலவு என்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று(வெள்ளிகிழமை) சட்டசபையில் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் சட்டடபையில் கூறியதாவது:

சாதாரண டியூப் லைட்களை பொருத்துவதற்கு பதிலாக சோடியம் வேப்பர்விளக்குகளை பொருத்தியதன் மூலம் ரூ 21.26 கோடி செலவை தி.மு.க அரசுஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் கோ.சி.மணி தான்.சோடியம் வேப்பர் விளக்குகளை பொருத்தியதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ 7.36கோடி செலவு ஏற்பட்டுள்ளது.

சோடியம் வேப்பர் விளக்குகளை பயன்படுத்திய பஞ்சாயத்துகள் மின்வாரியத்திற்கு ரூ13.90 கோடி பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

கோ.சி.மணி தன் கருத்தைக்கூற முயன்ற போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவரைபேசவிடவில்லை.

கோ.சி.மணிக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்தபோது அவர் பேசியதாவது:

நான் ஊழல் புரிந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் என் மீது எடுக்கப்படும் எந்தநடவடிக்கையையும் நான் சந்திக்க தயராக இருக்கும் போது இது போன்றகுற்றச்சாட்டுகளை முதல்வர் கூறுவது தவறு.

சோடியம் வேப்பர் விளக்குகள் நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டவை.சோடியம் வேப்பரின் தன்மையை குறைத்து மதிப்பிடக்கூடாது.

குழல் விளக்குகள் பொருத்துவது செலவை குறைக்கும் என்று முதல்வர் கூறினார். குழல்விளக்குகளுக்கு பதிலாக ஹரிகேன் விளக்கை (மண்ணெண்ணெய் விளக்கு)பயன்படுத்தினால் மேலும் செலவு குறையும் என்று கோ.சி.மணி கூறினார்.

கோ.சி மணி இவ்வாறு பேசியதை தி.மு.க உறுப்பினர்கள் மேஜையை தட்டிவரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X