For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை போர்க்கப்பல் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

திரிகோணமலையிலிருந்து 1,200 இலங்கை வீரர்களை ஏற்றிச் சென்ற போர்க் கப்பலை விடுதலைப்புலிகள்நடுக்கடலில் வழிமறித்து பயங்கரமாகத் தாக்கினர்.

யாழ்ப்பாண வளைகுடா பகுதியில் உள்ள பாய்ண்ட் பீட்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த இக்கப்பலை, திடீரென்று20 படகுகளில் வந்த விடுதலைப்புலிகள் பயங்கரமாகத் தாக்க ஆரம்பித்தனர்.

சுதாரித்துக் கொண்ட கப்பலிலிருந்த இலங்கை கடற்படையினர் திருப்பித் தாக்கியதில், 2 விடுதலைப்புலிகளின்படகுகளைத் தகர்த்தெறிந்தனர்.

இதையடுத்து, காங்கேசன் துறையிலிருந்தும், பாய்ண்ட் பீட்ரோவிலிருந்தும் மேலும் சில கப்பல்கள் கிளம்பிச்சென்று, விடுதலைப்புலிகளைத் தாக்க ஆரம்பித்தன.

வான் வழியாகப் புலிகள் மீது தாக்குதல் நடத்த ஹெலிகாப்டர்களும், கபிர் ரக போர் விமானங்களும் கூட அங்குவிரைந்துள்ளன.

சண்டை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உயிர்ச்சேதம் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X