For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தீவிரவாதத்தை எதிர்த்து போரிட மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பது என்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில்நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குத்தலையடுத்து, ஆப்கான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காதயாராகி வருகிறது. அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு காரணம் சர்வ தேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன்தான்என்று அமெரிக்கா உறுதியாக அறிவித்துள்ளது.

பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதால பின் லேடனின் மறைவிடங்களைத் தாக்க அமெரிக்காமுடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக ஏற்படவுள்ள விளைவுகள் குறித்தும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்தும்முடிவெடுக்க பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று (சனிக்கிழமை)நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அப்போது தீவிரவாத்தை எதிர்த்து போராடஅரசுக்கு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனாலூம், தீவிரவாதத்தை ஒழிக்க அரபு நாடுகள் முன்வர வேண்டும். குறிப்பிட்ட எந்த மதத்தினர் மீதும் தாக்குதல்நடத்தக்கூடாது. அவ்வாறு குறிப்பாக ஒரு மதத்தினர் மீது தாக்குதல் நடத்தினால் அது உலகத்தில் பிளவைஏற்படுத்திவிடக்கூடும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் எச்சரித்தனர்.

அரசு எந்த முடிவெடுத்தாலும் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசும் போது பிரதமர் கூறுகையில், "தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள்குறித்து வெளிவரும் செய்திகள் குறித்து என்னை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.ஆட்சேபணைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்" என்றார்.

செப்.18 - தீவிரவாத எதிர்ப்பு தினம்

இந்த கூட்டத்தில் வரும் 18ம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

பிரமோத் மகாஜன் பேட்டி

கூட்டம் முடிந்த பின் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அமெரிக்க நிர்வாகத்துடனும், ரஷ்யா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் நமது தேசிய பாதுகாப்புஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

தேவை ஏற்பட்டால் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் முக்கிய நாடுகளுக்கு சென்று அந்நாட்டின்கருத்துக்களை கேட்டறிவார்.

இந்தியாவிடமிருந்து எந்த உதவியையும் அமெரிக்கா கேட்கவில்லை. கூடுதல் வரி விதிக்கும் திட்டமும் அரசுக்குஇல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X