ஜெ. பதவி ரத்து- கருத்து கூற காங்கிரஸ் மறுப்பு
டெல்லி:
ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்ததீர்ப்பின் மீது அரசியல் ரீதியாக கருத்து கூற முடியாது என்று காங்கிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி கூறயுள்ளார்.
இது குறித்த காங்கிரஸ் கட்சியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் காஙகிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் ஜெயபால் ரெட்டியிடம் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது அரசியல் ரீதியாககருத்து கூற முடியாது.
எங்கள தோழமை கட்சியான அ.தி.மு.கவின் தலைவர் ஜெயலலிதாதான்.
அவரது கட்சிக்கு தமிழக சட்டசபையில் பெரும்பான்மை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அ.தி.மு.கவேசமாளித்துக் கொள்ளும்.
எனவே இது அவர்களின் உட் கட்சி விவகாரம் என்று கருதுகிறோம்.
முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அ.தி.மு.கவின் தலைவராகவும்,தமிழகத்தின் பிரபலமான தலைவராகவும் ஜெயலலிதா திகழ்வார்.
காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியின் தலைவராகவும் ஜெயலலிதா தொடர்ந்துநீடிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications