For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடும்பாவியோடு சேர்ந்து எரிந்த 20 அதிமுக தொண்டர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் அதிமுகவினர் பிரதமர் வாஜ்பாய் கொடும்பாவியை எரித்தபோது தீ பரவி 10 பெண்கள் உள்பட 20பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பைஎதிர்த்தும், பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்தும் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

சென்னையில் திங்கள்கிழமை நகரின் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூர்கேம்ப் ரோட்டில் அதிமுகவினர் ஊர்வலம் நடத்தினர். தபால் நிலையம் அருகே ஊர்வலம் முடிந்தது.

பின்னர் சிலர் வாஜ்பாய் கொடும்பாவியை கொளுத்தினர். அப்போது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதால் தீதொண்டர்கள் மீது பரவியது. இதில் 10 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் மீது தீ பரவியது.

தீயில் கருகிய அவர்களை அருகிலிருந்த தொண்டர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில்சிலருடைய நிலை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X