வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பு .. பா.ஜ.க. எச்சரிக்கை
சென்னை:
"பிரதமர் வாஜ்பாயின் கொடும்பாவியை எரிப்பதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்புஅளித்ததைக் கண்டித்தும், இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று கூறியும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பலபகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
வாஜ்பாய் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தையும் அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நடத்திவருகின்றனர்.
இதையடுத்து கிருபாநிதி தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "உடனடியாக இந்த செயலை நிறுத்ததமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரதீய ஜனதாத் தொண்டர்கள் பொறுமைஇழப்பதைத் தவிர்க்க முடியாது" என்று கூறியுள்ளார்.