For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டான்சி வழக்கு: ஜெ. மனு மீதான விசாரணை தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி வழக்கு, பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனி நீதிமன்றம் தனக்குவழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா தாக்கல்செய்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.

இந்த வழக்கு நீதிபதி தினகர் முன் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மனுக்களைவிசாரிக்க நீதிபதி தினகர் நியமிக்கப்பட்ட பின்னர் இப்போது தான் முதல் விசாரணைதொடங்குகிறது.

ஜெயலலிதா முதல் முதலாக முதல்வராக பதவி வகித்த போது அரசுக்கு சொந்தமானடான்சி நிலத்தை விலை குறைவாக வாங்கியதால் அரசுக்கு ரூ 3 கோடி இழப்புஏற்பட்டதாக முந்தைய திமுக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

மேலும் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதிவழங்கியதாகவும் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு பிளசண்ட் ஸ்டேஓட்டல் வழக்கில் 1ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், டான்சி நில வழக்கில் 3ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதனால் அவர்கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதையும் மீறி அவர் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், இந்த வழக்குகளில்சிறை தண்டனை பெற்றதால் அவர் முதல்வராக பதவியேற்றதையே உச்ச நீதிமன்றம்ரத்து செய்தது. இதனால் அவர் பதவி இழந்தார்.

முன்னதாக டான்சி வழக்கிலும், பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கிலும் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி ஜெயலலிதா சென்னைஉயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் ஆகஸ்டு மாதம் 27ம்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி நீதிபதியின் மீதே குரை கூறினார்.வழக்கின் ஆவணங்களை படிக்க தனக்கு தேவையான கால அவகாசம் வழங்கவில்லைஎன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை வேறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் தன்மனுவில் கேட்டுக் கொணடிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதானவிசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் வெங்கடபதிக்கு முழுமையாக வழங்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் ஜெயலிலதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையை விசாரிக்க புதியநீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும், விசாரணை அக்டோபர் மாதம் 1ம் தேதி வரைஜெயலலிதாவின் மனு மீதான விசாரணையைத் தொடங்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் இந்த வழக்கு விசாரணையை விரைவில் நடக்க வைத்து, எப்படியாவதுதண்டனையை ரத்து செய்ய வைத்து, தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவதுமுதல்வராகத் தொடர்ந்து விடலாம் என்ற ஜெயலலிதாவின் முயற்சிகளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவிடுபொடியாக்கியது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கே.ஜெயின்கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். இதையடுத்து ஆந்திரமாநிலத்திலிருந்து நீதிபதி சுபாஷன் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனால் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்களை விசாரிக்க புதிய நீதிபதியைநியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

சுபாஷன் ரெட்டி செப்டம்பர் முதல் வாரத்தில் தான் தலைமை நீதிபதியாகப்பதவியேற்றார். ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்களை விசாரிக்க நீதிபதி தினகரைஅவர் நியமித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அக்டோபர் 1ம் தேதியான இன்றுஜெயலலிதாவின் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி தினகர் தொடங்கினார்.

ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்ஆஜராகியுள்ளார்.

திங்கள்கிழமை விசாரணையின் போது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம்சுவாமியும் ஆஜராகி இருந்தார். இந்த வழக்கில் தன்னையும் வாதியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அவரை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்வது குறித்து ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் ,அரசு வழக்கறிஞரும் புதன்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தினகர்உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X