த.மா.கா. போட்டி வேட்பாளர்களுக்கு வாசனின் அன்பான வேண்டுகோள்
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் அதிகாரபூர்வவேட்பாளர்களை எதிர்த்தும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தமாகாவினர் தங்கள் வேட்புமனுவை வெள்ளிக்கிழமைக்குள்திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் தலைவர் மறைவு அதிர்ச்சி மறையும் முன் நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
நமது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டுஅவர்களுக்கு நமது கட்சியின் சார்பாக அங்கீகார கடிதமும் வழங்கப்பட்டு விட்டது.
திறமையும், விசுவாசமும் உள்ள பலருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவாய்ப்பளிக்க இயலவில்லை. தோழமை கட்சிகளுடன் கூட்டணி அடிப்படையில்போட்டியிடுவதால் தகுதியுள்ள பலருக்கும் தேர்தலில் போட்டியிடவாய்ப்பளிக்கவில்லை.
நமது கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும், நமதுதோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதமாகாவினர் தங்கள் வேட்புமனுவை வெள்ளிக்கிழமைக்குள் திரும்ப பெறுமாறுஅன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் தாங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்ற விவரத்தை நமது தலைமைநிலையத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில்கூறியுள்ளார்.